A new Bike for Rasheed Bhai - Nagore

Mohdjamal
Lancée le 19 mars 2025

0

collecté avec 0 participant

Fermée depuis le 20 mai 2025

*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...*

*நம்மவர்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் கருணையும், அருளும் நின்று நிலவட்டும் என்று பிரார்த்தித்தவர்களாக 🤲🏼 !!*

*நாம் பயணிக்கும் 📱- Aliyur Friends Group - Whatsapp - குழு மூலமாக ஒரு சிறிய வேண்டுகோள்* 👇🏼

*📌நமது ஊருக்கு நாகூரிலிருந்து 40-50 வயது மதிக்கத்தக்க _ரஷீத்_ என்ற நபர்  கடந்த 4-5 ஆண்டுகளாக BEEF வியாபாரம் செய்து கொண்டு இருக்கிறார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே !!!*

*🌙 ரமலான் - நோன்பு கால நிலையிலும் நோன்பு நோற்றுக் கொண்டு வாரத்திற்கு குறைந்தது 3-4 தடவையாவது நாகூரிலிருந்து ஆழியூர், மஞ்சக்கொல்லை, பொரவச்சேரி, கூத்தூர், அடியற்கை  தெத்தி இன்னும் ஏனங்குடி, திட்டச்சேரி, வவ்வாலடி ஆகிய நாகப்பட்டினம் மாவட்டம் ஊர்களுக்கு வெயில் / மழை என்றும் பாராமல் பல சிரமத்திற்கு மத்தியில் பைக் ஓட்ட தெரிந்தும் அதை வாங்குவதற்கு வசதி இல்லாத காரணத்தினால் பல கி.மீ சைக்கிள் 🚲 மிதித்து வந்து வியாபாரம் செய்து அல்லாஹ் அவருக்கு வழங்கிய வாழ்வாதாரத்தை பெற்று கொண்டு வருகிறார்.*

*எனவே அவருடைய  உழைப்பிற்கு அங்கீகாரம் வழங்க அவருடைய ஏழ்மையை கருத்தில் கொண்டு அவருக்கு இருசக்கர 🛵 மோட்டார் வாகனம் (TVS - EXCEL  BIKE) நன்கொடையாக வழங்கலாம் என்று முடிவெடுத்து உள்ளோம். (பக்கத்து தெரு செல்வதற்கு கூட பைக் தேவையை எதிர்ப்பார்க்கும் நாம் 45-50 வயதை கடந்தும் தினமும் 20-25 கி.மீ வாழ்வாதாரத்திற்காக பயணித்து கொண்டிருக்கின்றார்)*

*💰 ஆகவே உங்களுடைய ஜகாஅத்தில் சிறு தொகையோ / அல்லது ஸதகா தொகை போன்ற பொருளாதார உதவிகளை இந்த ரமலான் மாதத்தில் தந்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.*

*📢 பங்களிப்பு செய்ய விரும்பும் சகோதரர்கள் கீழ்காணும்  GPay எண்ணை பயன்படுத்தி கொள்ளவும்.*

*_GPAY_*
*MOHAMED JAMAL*
*8148114383*

*MOHAMED FAIZAL*
*8754893118*

*🪙 பணத்தை சில்லறையாக மாற்றி வாசலில் வருபவருக்கு கொடுத்தால் நமது ஜகாத் கடமை நிறைவேறிவிடும் என்று நம்மில் பலர் எண்ணிக் கொண்டுள்ளனர். சில்லறைகள் ஸதகாவில் கருதப்படுமே தவிர அது ஜகாத் என்ற நிலையில் வராது.*

*💰ஜகாத் என்பது நம்முடைய வருமானத்தில் 2.5 % கணக்கிட்டு அல்லாஹ் கூறியுள்ள ஜகாத் வாங்க தகுதியான அந்த 8 (எட்டு) வகையினருக்கு தகுதியறிந்து வழங்குவதே ஜகாஅத். இது நமக்கிடப்பட்ட ஐந்து கட்டாய கடமைகளில் ஒன்றாகும்.‌ ஜகாத் யார் மீது கடமை என்ற வரையறைகளும் மார்க்கத்தில் உள்ளன.‌*

*🤲🏼அல்லாஹ் தொழுகையைப் பற்றி கூறக்கூடிய வசனங்களில் ஜகாத்தையும் சேர்த்தே கூறியுள்ளான். எனவே அதன் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும்.*

*🎁ஃபித்ரா தொகையை எப்படி நாம் கூட்டாக வசூலித்து தகுதியான நபர்களிடம் கொண்டு சேர்க்கின்றோமோ அது போன்றே வசூலிக்கப்பட்ட ஜகாத் நிதியின் மூலமாக உதவிகள் புரிந்து ஒருவரின் பிரச்சனைகள் கூடுமான அளவு தீர்க்கப்பட வேண்டும் அதுவே இஸ்லாமிய  அரசாங்கத்தில் நபியவர்கள்  காண்பித்து தந்த  பைத்துல் மால்-யின் முழுமையான நோக்கம், தற்போது அப்படி சமூகமாக ஒன்றிணைந்து செயல்படக் கூடிய கால சூழ்நிலை நம் தேசத்திலும், நமது ஊரிலும் பெரும்பாலும் இல்லை.* 

*🏢ஒரு சில ஊர்களில் மட்டும் அந்தந்த ஊரை சார்ந்த / சேர்ந்த சகோதரர்கள் ஒன்றாக இணைந்து ஜகாத் தொகையை ஒன்றாக்கி குழுவாக அப்பகுதியில்  ஏழ்மையான மக்களுக்கு தேவையறிந்து தங்களால் இயன்ற உதவிகள் செய்து கொண்டிருகின்றார்கள். அனைத்து ஊர்களிலும் இது போன்று செயல்படுத்த முன் வரவேண்டும்*

*🔎மேலும் இது சம்பந்தமாக வெளிநாட்டில் உள்ள சகோதரர்கள் என்னையும் , கபீர் அண்ணன் அவர்களையும்  உள்நாடு / உள்ளூரில் உள்ள சகோதரர்கள் முகம்மது பைசல் அவர்களையும் தொடர்பு கொள்ளவும்.*

*📩 பணம் அனுப்பும் சகோதரர்கள் இந்த குரூப்பிலோ / அல்லது எங்களுக்கு தனிப்பட்ட முறையிலோ தெரியப்படுத்தவும்.*

*இதற்கான வரவு செலவு கணக்குகள் முழு விவரங்கள் இறுதியாக இந்த குழுவில் பதிவிடப்படும். இன்ஷா அல்லாஹ் !!*

💥🌙💥🌙💥🌙💥🌙💥🌙

اِنْ تُبْدُوا الصَّدَقٰتِ فَنِعِمَّا هِىَ‌ وَاِنْ تُخْفُوْهَا وَ تُؤْتُوْهَا الْفُقَرَآءَ فَهُوَ خَيْرٌ لَّكُمْ‌ وَيُكَفِّرُ عَنْكُمْ مِّنْ سَيِّاٰتِكُمْ‌ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ‏
தான தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அதுவும் நல்லதே; (ஏனெனில், அவ்வாறு செய்யப் பிறரையும் அது தூண்டும்;) எனினும், அவற்றை மறைத்து ஏழைகளுக்கு வழங்கினால் அது உங்களுக்கு இன்னும் நல்லது; (தர்மங்களால்) அவன் உங்கள் தீமைகளை அழித்துவிடுவான்; நீங்கள் செய்வதை(யெல்லாம்) அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்.
*📖(அல்குர்ஆன் : 2:271)*

الَّذِيْنَ يُقِيْمُوْنَ الصَّلٰوةَ وَيُؤْتُوْنَ الزَّكٰوةَ وَ هُمْ بِالْاٰخِرَةِ هُمْ يُوْقِنُوْنَ‏
(அவர்கள் எத்தகையோரென்றால்) அவர்கள் தொழுகையை நிலைநிறுத்துவார்கள்; இன்னும், ஜகாத்தைக் கொடுப்பார்கள்; அன்றியும், அவர்கள் மறுமை மீது நம்பிக்கை கொள்வார்கள்.
*📖(அல்குர்ஆன் : 27:3)*

وَلَا يَحُضُّ عَلٰى طَعَامِ الْمِسْكِيْنِ‏
அன்றியும், அவன் ஏழைகளுக்கு(த் தானும் உணவளிக்கவில்லை, பிறரையும்) உணவளிக்கத் தூண்டவில்லை.
فَلَيْسَ لَـهُ الْيَوْمَ هٰهُنَا حَمِيْمٌۙ‏
எனவே, அவனுக்கு இன்றைய தினம் இங்கே (அனுதாபப்படும்) எந்த நண்பனும் இல்லை.
*📖(அல்குர்ஆன் : 69:34-35)*

اِنَّمَا الصَّدَقٰتُ لِلْفُقَرَآءِ وَالْمَسٰكِيْنِ وَالْعٰمِلِيْنَ عَلَيْهَا وَالْمُؤَلَّـفَةِ قُلُوْبُهُمْ وَفِى الرِّقَابِ وَالْغٰرِمِيْنَ وَفِىْ سَبِيْلِ اللّٰهِ وَابْنِ السَّبِيْلِ‌ فَرِيْضَةً مِّنَ اللّٰهِ‌ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ‏
(ஜகாத் என்னும்) தானங்கள் - வறியவர்களுக்கும், ஏழைகளுக்கும், அதற்காக (வசூல் செய்வது, கணக்கிடுவது போன்ற வேலைகளில்) உழைப்பவர்களுக்கும், எவர்களுடைய இதயங்கள் (இஸ்லாத்தின்பால்) ஈர்க்கப்படுகின்றனவோ அவர்களுக்கும், (அடிமைகளை) விடுதலை செய்வதற்கும், கடன்பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், வழிப்போக்கருக்கும் உரியவை; (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும்; அல்லாஹ் (யாவையும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன்.
*📖(அல்குர்ஆன் : 9:60)*

*📌குறிப்பு*

*மஞ்சக்கொல்லை, பொரவச்சேரி, கூத்தூர், அடியற்கை, தெத்தி, நாகப்பட்டிணம், நாகூர், ஏனங்குடி, திட்டச்சேரி, வவ்வாலடி மற்ற ஊர் சகோதரர்கள் இதில் இணைந்து அவருக்கு வாகணம் வாங்கி தருவதற்கு உங்களது பங்களிப்புகளை தர விரும்பினால்  கீழ்காணும்  எங்களது நம்பரில் தொடர்பு கொள்ளவும்.*

*ஜஸாகல்லாஹ் ஹைர் !!*

*_▪️Contact Details_* ⏬

*📱Aliyur Friends Group - WHATSAPP* 👬👬

*📞MOHAMED JAMAL*
00971551407710 
*📞CABIR*
0033630850806
*📞MOHAMED FAIZAL*
00918754893118

*Pls Share to all*

Soyez le TOUT premier à participer !
logo cotizup

Qui refuse encore de bons cookies 🍪 en ?

Nous utilisons des cookies afin d'améliorer votre expérience de visite, vous proposer des contenus personnalisés, développer nos services et mesurer notre audience. Vous pouvez accepter ou refuser ces cookies.

logo cotizup